Breaking
Mon. Sep 23rd, 2024

இந்­தி­யா­வி­லி­ருந்து பஸ்கள் கொள்­வ­னவு செய்­ததில் பாரிய மோச­டிகள் இடம்­பெற்­றுள்­ளன. இதில் முன்னாள் ஆட்­சியில் அமைச்ச­ரொ­ரு­வரின் பங்­க­ளிப்பு கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ள­தோடு லஞ்சம் பெற்றுக் கொண்­டது தொடர்­பிலும் தற்­போது சட்ட நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தாக நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க நேற்று சபையில் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற உள்­நாட்டு திறை­சேரி உண்­டியல் கட்­டளைச்சட்­டத்தின் கீழான தீர்­மானம் தொடர்­பான விவா­தத்தை ஆரம்­பித்து வைத்து உரை­யாற்­றும்­போதே நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க இவ்­வாறு தெரி­வித்தார்.

சபையில் அமைச்சர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்;

வரி தொடர்­பான தேசிய கொள்­கை­களை நிறை­வேற்­று­வதில் நெருக்­க­டிகள் ஏற்­ப­டு­கின்­றன.கம்­போ­டியா, மியன்மார் உட்­பட பல நாடு­க­ளி­லி­ருந்து பாக்கு இறக்­கு­மதி செய்­யப்­பட்டு இங்­கி­ருந்து கொள்­க­லன்­களில் இலங்கைப் பெயரில் ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கி­றது.

ஆனால் இதற்­கான எந்த வரியும் செலுத்­தப்­ப­டு­வ­தில்லை.தற்­போது அதற்­கான வரியை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்ளோம்.வரி­களை அதி­கா­ரிக்கும் போது சில நிறு­வ­னங்கள் நீதி­மன்றம் சென்றும் தாம் செலுத்­திய வரி­களை மீளப் பெற்றுக் கொள்­கின்­றது.இவ்­வாறு நீதி­மன்­றத்தின் செயற்­பா­டு­களால் நாட்­டுக்கு வரி வரு­மானம் குறைந்­துள்­ளது.

இது பல நெருக்­க­டி­களை தோற்­று­விக்­கின்­றது. வரி­களை அதி­க­ரிக்­கு­மாறு சம்­ப­ளத்தை அதி­க­ரிக்­கு­மாறு நீதி­மன்றம் அறி­வித்தால் என்ன செய்ய முடியும்.இவ்­வா­றான நட­வ­டிக்கை நடை­முறை சாத்­தி­ய­மா­னதா?

எனவே நிதியை நிர்­வ­கிக்கும் அதி­காரம் பாராளுமன்றத்திற்கே உள்ளது. அதனை நீதிமன்றம் பறிக்க இடமளிக்க முடியாது.நாட்டில் 24 மதுபானம் தயாரிக்கும் கம்பனிகள் உள்ளன. ஆனால் 4 கம்பனிகள் மட்டுமே வரி செலுத்துகின்றன என்றார்.

By

Related Post