Breaking
Sun. Sep 22nd, 2024
கொழும்பில் இன்று பாரியளவில் மாணவர் போராட்டமொன்று நடத்தப்பட உள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் சபையின் அழைப்பாளர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.

அண்மையில் உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா மாணவர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு எதிரில் நடத்திய போராட்டத்தின் மீது, பொலிஸார் நடத்திய தாக்குதல்களை கண்டிக்கும் வகையிலும் சில கோரிக்கைகளை முன்வைத்தும் இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமன்றி தொழில்நுட்ப கல்லூரிகளின் மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இன்று கொழும்பில் பாரியளவில் எதிர்ப்பு பேரணியொன்றை நடாத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தனியார் பல்கலைக்கழகங்ளை ரத்து செய்ய வேண்டும், அரச பல்கலைக்கழகங்களுக்கான மாணவர் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும், கல்வியை விற்பனை நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படக் கூடாது ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இன்று இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.

இதேவேளை, மாணவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் என அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post