Breaking
Sun. Sep 22nd, 2024

உயர் தேசிய கணக்­கீடு டிப்­ளோமா பாட­நெறி தொடர்­பான அனைத்து கோரிக்­கை­களும் நிறை­வேற்­றப்­படும் என உறு­தி­ய­ளித்த நிலை­யி­லேயே மாண­வர்கள் எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டத்தை நடத்­தினர். இது தேவை­யற்­ற­தாகும் எனத் தெரி­வித்­துள்ள உயர் கல்வி மற்றும் நெடுஞ்­சா­லைகள் அபி­வி­ருத்தி அமைச்சர் லக் ஷ்மன் கிரி­யெல்ல.

இது தொடர்­பான முழு­மை­யான விப­ரங்­கள் விரைவில் வெளி­யி­டப்­ப­டு­மென்றும் தெரி­வித்­துள்ளார். இவ்­வி­டயம் தொடர்­பாக அமைச்சர் லக் ஷ்மன் கிரி­யெல்ல விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, மாண­வர்­களின் அனைத்து கோரிக்­கை­களும் நிறை­வேற்­றப்­படும் என உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டது.

கடந்த 29 ஆம் திகதி உயர் தேசிய கணக்­கீடு டிப்­ளோமா பாட­நெறி தொடர்­பாக தொழிற்­சங்­கங்­களின் பிர­தி­நி­திகள், அந்­நி­று­வ­னத்தின் அதி­கா­ரி­க­ளுடன் பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­பட்­டன.
இதன்­போது அவர்­க­ளது கோரிக்­கைகள் அனைத்தும் நிறை­வேற்­றப்­படும் என உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டது. உயர் தேசிய கணக்­கீடு டிப்­ளோ­மா­வுக்கு பட்­டப்­ப­டிப்பு அந்­தஸ்து வழங்­கப்­ப­டு­வ­தற்­கான சுற்று நிருபம் 1990 ஆம் ஆண்டு வெளி­யி­டப்­பட்­டது.

ஆனால் கடந்த ஆட்­சி­யா­ளர்கள் அந்த அந்­தஸ்­தினை வழங்­கு­வதை இரத்துச் செய்­துள்­ளனர்.

புதிய அரசு ஆட்­சிக்கு வந்த பின்னர் கல்வி அமைச்சு ஊடாக அரச நிர்­வாக அமைச்­சிற்கு உயர் தேசிய கணக்­கீட்டு டிப்­ளோமா பாட­நெ­றிக்கு பட்­டப்­ப­டிப்பு அந்­தஸ்தை வழங்­கு­மாறு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதனை மாண­வர்­க­ளுக்கும் அதி­கா­ரி­க­ளுக்கும் தெளி­வு­ப­டுத்­தினோம்.

இவ்­வாறு கோரிக்­கை­களை வழங்­கு­வ­தற்கு உறு­தி­ய­ளிக்­கப்­பட்ட நிலையில் இவ்­வா­றான எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்­களை நடத்துவது அர்த்தமற்ற செயற்பாடாகும்.

By

Related Post