Breaking
Sat. Sep 21st, 2024

எதிர்­வரும் உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்­தலில் தனித்து கள­மி­றங்கும் நோக்கில் மஹிந்த அணி­யா­னது புதிய அர­சியல் கட்­சியை உரு­வாக்கும் பணி­களில் மும்­மு­ர­மாக ஈடு­பட்­டு­வ­ரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

குறிப்­பாக இது தொடர்­பான கலந்­து­ரை­யா­டல்கள் கடந்த வாரமும் இடம்­பெற்­ற­தா­கவும் நாளை செவ்­வாய்க்­கி­ழ­மையும் நடை­பெ­ற­வுள்­ள­தா­கவும் ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சியின் தலைவர் தினேஷ் குண­வர்த்­தன தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்பில் அர­சியல் கட்­சிகள் மற்றும் அர­சியல் குழுக்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்­டு­வ­ரு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

இதே­வேளை கடந்த வாரம் இடம்­பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்­து­கொண்ட முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ குறிப்­பி­டு­கையில் எனது கட்சி சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சி­யாகும். நான் மட்­டுமே சுதந்­திரக் கட்­சி­யி­லி­ருந்து வில­காமல் இருக்­கின்றேன். சுதந்­திரக் கட்­சியை நான் மட்­டுமே காட்­டிக்­கொ­டுக்­க­வில்லை. பலர் தமது கட்­சி­களை காட்­டிக்­கொ­டுத்­துள்­ளனர். ஆனால் நாங்கள் அதனை செய்­ய­வில்லை. அவ்­வாறு செய்­ய­வு­மாட்டோம்.

ஆனால் தற்­போ­தைய நிலை­மை­களை பார்க்­கும்­போது புதிய கட்சி ஒன்று வராது என்று கூற முடி­யாத நிலை காணப்­ப­டு­கின்­றது. குறிப்­பிட்ட தரப்­பினர் கட்­சி­யி­லி­ருந்து புறக்­க­ணிக்­கப்­பட்டால் அவர்கள் வேறு எங்காவது செல்லவேண்டியேற்படும். அவர்கள் புதிய கட்சியை உருவாக்கலாம். எனவே புதிய கட்சிகள் வரலாம் என்றார்.

By

Related Post