Breaking
Fri. Sep 20th, 2024
நாட்டிற்கு வருகை தந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ​ஷெரீப் கண்டி ஸ்ரீதலதா மாளிகைக்கு செல்லவுள்ளார். அத்துடன் பாகிஸ்தான் நிதி உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட கண்டி ஜின்னா மத்திய நிலையத்திற்கும் அவர் செல்லவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது .
பாகிஸ்தான் பிரதமர் பேராதனை தாவரவியல் பூங்காவிற்கும் செல்லவுள்ளதுடன் அங்கு மரக்கன்று ஒன்றினையும் நடவுள்ளார். நேற்று (5) முன்தினம் நாட்டிற்கு வருகை தந்த பாகிஸ்தான் பிரதமரை உத்தியோகபூர்வமாக வரவேற்கும் நிகழ்வு நேற்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post