Breaking
Fri. Sep 20th, 2024

தவறு செய்­தி­ருந்தால் தண்­டனை அனு­ப­விக்கத் தயார் என்றும் மக்கள் அர­சாங்­கத்தின் மீது கொண்­டுள்ள வெறுப்பை தமது குடும்­பத்தார் மீது காண்­பிக்க வேண்டாம் என்றும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்ளார்

நேற்று காலை கண்டி தலதா மாளி­கைக்குச் சென்று வழி­பா­டு­களில் ஈடு­பட்­டதன் பின்னர் ஊட­க­வி­ய­லா­ளர்கள் வின­விய கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

இன்னும் சில நாட்­களில் என்­னையும் அழைப்பர். நாம­லையும் அழைப்பர். பஸில், மற்றும் கோத்தபாய ஆகி­யோ­ரையும் அழைப்பர். நல்­லாட்­சியை சரி­யாக முன்­னெ­டுக்க வேண்­டு­மல்­லவா? இதன் காரண­மா­கவே ஏனைய விட­யங்­க­ளுக்கு அவர்­க­ளுக்கு நேரம் இல்­லாமல் போயுள்­ளது.

மக்கள் எதிர்ப்பு அதி­க­ரிக்கும் போது என்­மீதே குரோதம் கொள்­கின்­றனர். அதற்கு நான் என்ன செய்ய? மக்கள் எதிர்ப்பை தவிர்க்க அவர்கள் செயற்­பட வேண்டும். இது யோஷித்த மீதுள்ள குரோதம் அல்ல. இவை அனைத்தும் அர­சியல் அல்­லவா? அந்த குரோ­தத்தை பிள்­ளை­க­ளிடம் தீர்த்துக் கொள்ள முயற்சி செய்­கின்­றனர். நான் தவறு செய்திருந்தால் அதற்காக தண்டனை அனுபவிக்க தயாராகவுள்ளேன்.

By

Related Post