Breaking
Sat. Sep 21st, 2024

– எம்.எப்.எம்.பஸீர் –

வவு­னியா  மாணவி ஹரிஸ்­ணவி வன்­பு­ணர்வின் பின்னர் படு­கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் தொடர்­பி­லான விசா­ர­ணை­களை முன்­னெடுப் ­ப­தற்கு சிறப்புக் குழுக்கள் நியமிக் ­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி வித்துள்ளனர்.

விசா­ர­ணைகள் தீவி­ரப்­ப­டுத்­தப்ப்ட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சfர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

வவு­னியா பொலிஸ் நிலை­யத்தின் குற்­ற­வியல் பீர்வு பொறுப்­ப­தி­கா­ரியின் கீழ் இது தொடர்­பி­லான விசா­ர­ணை­க­ளுக்­காக சிறப்பு பொலிஸ் குழுக்கள் விசா­ர­ணையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்ள போதும் நேற்று (24) மாலை வரை சந்­தேக நபர் தொடர்­பிலோ அல்­லது குறித்த படு­கொலை தொடர்­பிலோ தேவை­யான தக­வல்கள்  கிடைக்­க­வில்லை என உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர சுட்­டிக்­காட்­டினார்.

மாண­வியின் குடும்­பத்­த­வர்­க­ளிடம் வாக்கு மூலங்கள் பதிவு செய்­யப்­பட்­டுள்ள நிலையில் அவர்கள் வழங்­கி­யுள்ள வாகு­மூ­லங்­களும் கவ­னந்தில் கொள்­ளப்­பட்­டுள்­ள­தா­கவும் மேல­திக சிறப்பு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் விசாரணைகள் தொடர்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

By

Related Post