Breaking
Fri. Sep 20th, 2024

நிதி மோசடி கார­ண­மாக தலைமைப் பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்டு தடைக்­குள்­ளான செப் பிளட்­ட­ருக்குப் பதி­லாக சர்­வ­தேச கால்­பந்­தாட்ட சங்­கங்­களின் சம்­மே­ள­னத்­திற்கு (ஃபீஃபா) புதிய தலைவர் ஒருவர் இன்று தெரிவு செய்­யப்­ப­ட­வுள்ளார்.

சுவிட்­ஸர்­லாந்தின் சூரிச் நகரில் அமைந்­துள்ள ஹோலென்ஸ்­டியன் அரங்கில் நடை­பெ­ற­வுள்ள ஃபீஃபாவின் அதி­வி­சேட பொதுக்­கூட்­டத்­தின்­ போது இத் தேர்தல் நடை­பெ­ற­வுள்­ளது.

செப் பிளட்­ட­ருக்கு எதி­ராக நிதி மோசடி தொடர்­பான விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­னதை அடுத்து ஃபீஃபா செயற்­பா­டு­களில் பங்கு­கொள்­ள­மு­டி­யா­த­வாறு அவ­ருக்கு கடந்த வருடம் டிசம்பர் மாதம் எட்டு வருடத்தடை விதிக்­கப்­பட்­டது.

வேட்பாளர்கள் ஜியானி இன்ஃ­பன்­டீனோ (45 வயது, சுவிட்­ஸர்­லாந்து, ஐரோப்­பிய கால்­பந்­தாட்ட சங்­கங்­களின் ஒன்­றிய பொதுச் செய­லாளர்),டோக்­கியோ செக்ஸ்வேல் (62 வயது, தென் ஆபி­ரிக்கா, ஃபீஃபா பாகு­பாட்­டுக்கு எதி­ரான நட­வ­டிக்கை படை), ஜெரோம் சேம்­பாஞே (57 வயது, பிரான்ஸ், ஃபீஃபாவின் முன்னாள் செய­லா­ளர்­நா­யகம்),இள­வ­ரசர் அலி பின் ஹுசெய்ன் (40 வயது, ஜோர்தான், ஃபீஃபாவின் முன்னாள் உதவித் தலைவர், தலைவர் பத­விக்­கான முன்னாள் வேட்­பாளர்), ஷெய்க் சல்மான் பின் இப்­ராஹிம் அல் காலிஃபா (50 வயது, பாஹ்ரெய்ன், ஃபீஃபா உதவித் தலைவர், ஆசிய கால்­பந்­தாட்ட கூட்­டு­சம்­மே­ளனத் தலைவர்)

இத் தேர்­தலில் ஜியானி இன்ஃ­பன்­டீனோ, ஷெய்க் சல் மான் பின் இப்­ராஹிம் அல் காலிஃபா ஆகிய இரு­வ­ருக்கு இடையில் கடும் போட்டி நிலவும் என சர்­வ­தேச கால்­பந்­தாட்ட விமர்­ச­கர்கள் கூறு­கின்­றனர்.

இன்ஃ­பன்­டீ­னோ­வுக்கு ஐரோப்பா மற்றும் தென் அமெ­ரிக்க ஆத­ரவு இருப்­ப­தா­கவும் சல்­மா­னுக்கு ஆசிய, கடல்சூழ் பிராந்­திய மற்றும் பல தென் ஆபி­ரிக்க நாடு­களின் ஆத­ரவு இருப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இன்­றைய தலை­வரைத் தெரிவு செய்­வ­தற்­கான தேர்­தலில் ஃபீஃபாவில் அங்கம் வகிக்கும் இலங்கை உட்­பட 209 நாடு­களின் பிர­தி­நிதி ஒரு வாக்கு வீதம் அளிக்க அனு­ம­திக்­கப்­ப­டுவர்.

போட்­டி­யி­டு­ப­வர்­களில் ஒரு­வ­ருக்கு முத­லா­வது வாக்­க­ளிப்பில் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை கிடைத்தால் அவர் தலை­வ­ராகத் தெரி­வாவார்.

மூன்­றி­லி­ரண்டு அதா­வது 139 வாக்­கு­களை ஒருவர் பெறத் தவ­றினால் முத­லி­ரண்டு இடங்­களில் இருப்­பவர்­­க­ளுக்கு இடையில் இரண்டாம் சுற்று வாக்­க­ளிப்பு நடத்­தப்­படும்.

ஆபி­ரிக்கா (54 வாக்­குகள்), ஐரோப்பா (53), ஆசியா (46), வட மற்றும் மத்­திய அமெ­ரிக்கா (35), கடல்சூழ் பிராந்­ தியம் (11), தென் அமெ­ரிக்கா (10) ஆகிய வல­யங்­க­ளி­லுள்ள நாடு­களின் கால்­பந்­தாட்ட சங்கத் தலை­வர்கள் வாக்­க­ளிப்பர்.

இலங்கை சார்பாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் அநுர டி சில்வா வாக்களிக்கவுள்ளார்.

அவருடன் செயலாளர் அன்தனி பாலேந்திரா, முன்னாள் தலைவர் ரஞ்சித் ரொட்றிகோ ஆகியோர் சுவிட்ஸர்லாந்து சென்றுள்ளனர்.

By

Related Post