Breaking
Fri. Sep 20th, 2024

‘போதைப்பொருள்  அற்ற நாடு’ போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் ஐந்தாவது கட்டம் குருநாகலை மாவட்டத்தை மையப்படுத்தியதாக நடைமுறைப்படுத்தப்படுவதுடன், அதன் பிரதான நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (05) பிற்பகல் 2.00 மணிக்கு குருநாகல் மாளிகாப்பிட்டிய விளையாட்டரங்கில் நடைபெறும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ‘மைத்ரீ ஆட்சி – நிலையான நாடு’ கொள்கைப் பிரகடனத்திற்கேற்ப போதைப்பொருள் அற்ற ஒரு இலங்கையை உருவாக்குவதனூடாக சமூக, பொருளாதார, கலாசார அபிவிருத்திக்கான பின்புலத்தை அமைப்பதே ‘போதைப்பொருள் அற்ற நாடு’ தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும்.

போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியினால் நடைமுறைப்படுத்தப்படும் இந்நிகழ்ச்சித்திட்டத்தினூடாக மதுபானம், புகையிலை மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் பாவனையை படிப்படியாகக் குறைத்து அதனை பாவிப்பதனால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதனூடாக எல்லா இலங்கையர்களினதும் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும் வறுமையை ஒழிப்பதற்கும் நேரடிப்பங்களிப்பை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.

2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020 ஆம் ஆண்டாகும் போது இலங்கையில் சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தி, போக்குவரத்து மற்றும் விற்பனையை நூற்றுக்கு 80 வீதம் குறைப்பதுவும் 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகிகையில் 2020 ஆம் ஆண்டாகும் போது தனிநபர் மதுபாவனையை நூற்றுக்கு இருப்பத்தைந்து வீதம் குறைப்பதுவும் 2020 ஆம் ஆண்டாகும் போது புகையிலை உற்பத்தி மற்றும் பாவனையை நூற்றுக்கு 50 வீதமாகக் குறைப்பதுவும் புதியவர்கள் போதைப்பொருள் பாவனையை ஆரம்பிப்பதைத் தடுப்பதுவும் இதன் பிரதான இலக்குகளாகும்.

பாடசாலைப் பிள்ளைகள், சிவில் நிறுவனங்கள் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் செயற்படும் பிரஜைகள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட சிவில் மற்றும் அரச துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எல்லோரினதும் பங்குபற்றுகையுடன் நடைபெறும் ‘போதைப்பொருள் அற்ற நாடு’ தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் முதலாவது கட்டம் கம்பஹா மாவட்டத்தை மையப்படுத்தியதாக நடைபெற்றதுடன், இரண்டாவது கட்டம் காலி மாவட்டத்தை மையப்படுத்தியதாகவும் மூன்றாவது கட்டம் கேகாலை மாவட்டத்தை  மையப்படுத்தியதாகவும் நான்காவது கட்டம் கொழும்பு மாவட்டத்தை மையப்படுத்தியதாகவும் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சித்திட்டத்தின் 5 ஆவது கட்டம் குருநாகலை மாவட்டத்தை மையப்படுத்தியதாக நடைபெறுவதுடன், இத்தோடு இணைந்ததாக சட்டவிரோத போதைப்பொருள் சுற்றிவளைப்பு உள்ளிட்ட பல விசேட நிகழ்ச்சித்திட்டங்களும் கடந்த சில நாட்களில் மாவட்டம் எங்கிலும் நடைமுறைப்படுத்தப்பட்டன.

By

Related Post