Breaking
Mon. Sep 23rd, 2024

ஈக்­கு­வ­டோரைத் தாக்­கிய பூமி­ய­திர்ச்­சியில் சிக்கி பலி­யா­ன­வர்கள் தொகை 413 ஆக உயர்ந்­துள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

ஈக்­கு­வ­டோரின் பசுபிக் பிராந்­திய கடற்­க­ரையை கடந்த சனிக்­கி­ழமை தாக்­கிய இந்த பூமி­ய­திர்ச்­சியில் சிக்­கி­யுள்­ள­வர்­களை மீட்கும் பணிகள் தொடர்ந்து மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்ற நிலையில் பலி­யா­ன­வர்கள் தொகை மென்­மேலும் அதி­க­ரிக்­கலாம் என அஞ்­சப்­ப­டு­கி­றது.

கடந்த 7 தசாப்த காலத்தில் ஈக்­கு­வடோர் எதிர்­கொண்ட பாரிய பூமி­ய­திர்ச்­சி­யாக இது விளங்­கு­கி­றது. இந்த அனர்த்­தத்தில் சிக்கி சுமார் 2,500 பேர் காய­ம­டைந்­துள்­ளனர்.

பூமி­ய­திர்ச்சி தாக்கி இரு நாட்கள் கடந்த நிலையில் நேற்று முன்­தினம் திங்­கட்­ கி­ழமை பின்­னி­ரவு கடற்­கரை நக­ரான மான்­டா­விற்கு அருகில் இடிந்து விழுந்த ஹோட்­ட­லொன்றின் இடி­பா­டு­களின் கீழி­ருந்து 9 மாத மற்றும் 3 வய­து­டைய இரு பால­கிகள் உட்­பட 6 பேர் உயி­ருடன் மீட்­கப்­பட்­டுள்­ளனர். இந்­நி­லையில் பாதிக்­கப்­பட்ட பிராந்­தி­யங்­க­ளி­லான மீள் நிர்மாணப்பணி­க­ளுக்கு பல பில்லியன் டொலர் பெறுமதியான நிதி தேவைப்படுவதாக அந்நாட்டு ஜனாதிபதி ராபயல் கொர்ரியா குறிப்பிட்டுள்ளார்.

By

Related Post