Breaking
Mon. Sep 23rd, 2024

பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் (3) இடம்பெற்ற கைகலப்பின் போது தாக்குதலுக்கு இலக்காகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்தித் நேற்று (4) சமரசிங்க சிகிச்சைகள் நிறைவடைந்து வீடு திரும்பியுள்ளார்.

முன்னாள் ஜனா­தி­ப­தியும், தற்­போ­தைய குரு­ணாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­ப­க்ஷவின் இரா­ணு­வ பாது­காப்பு நீக்­கப்­பட்டமை தொடர்பில் மஹிந்த ஆதரவு அணி­யி­ன­ர் நேற்று பாராளுமன்றத்தில் எழுப்பிய சர்ச்சையையடுத்து அவர்களுக்கும் ஆளும் தரப்­புக்­கு­மி­டையே ஏற்­பட்ட வாய்த்த­ர்க்கம் திடீ­ரென கைக­லப்­பாக மாறி­யது.

இதன்­போது ஆளும்கட்சி மற்றும், மஹிந்த ஆதரவு அணி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சபா மண்­டபத்தின் மத்­தியில் ஒரு­வ­ரை­யொ­ருவர் தாக்கி­ய­துடன், கட்டி­பு­ரண்டு சண்­டை­யிட்­டனர். இதனால் சபை அல்லோல கல்லோலமானமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post