Breaking
Sun. Sep 22nd, 2024
Some of the weapons collected in Wednesday's Los Angeles Gun Buyback event are showcased Thursday, Dec. 27, 2012 during a news conference at the LAPD headquarters in Los Angeles. Mayor Antonio Villaraigosa's office says the weapons collected Wednesday included 901 handguns, 698 rifles, 363 shotguns and 75 assault weapons. The buyback is usually held in May but was moved up in response to the Dec. 14 massacre of students and teachers at Sandy Hook Elementary School in Newtown, Conn. (AP Photo/Damian Dovarganes)

பொதுமக்கள் சட்டவிரோதமாக வைத்திருக்கும் ஆயுதங்களை ஒப்படைப்பதற்காக பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலம் முடிவடைந்துள்ளதாகவும் இதுவரை 423 துப்பாக்கிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயன்த ஜயவீர தெரிவித்தார்.

சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்க கடந்த 25ஆம் திகதி வழங்கப்பட்ட கால எல்லை நேற்றுடன் முடிவடைந்துள்ளது.

சட்டவிரோதமான முறையில் உரிய அனுமதி பத்திரம் எதுவுமின்றி ஆயுதங்களை வைத்திருக்கும் நபர்கள் அந்த ஆயுதங்களை பொலிஸ் நிலையங்கள் அல்லது பிரதேச செயலகங்களில் ஒப்படைக்க முடியும் என அமைச்சு அறிவித்திருந்தது.

 பொது மன்னிப்புக் காலத்தில் ஒப்படைக்கப்படாத ஆயுதங்கள் அதன் பின்னர் அபகரிக்கப்படுவதுடன் அதற்கான விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்தவைகயில் குறித்த காலப்பகுதியில் 423 துப்பாக்கிகள் கிடைக்கப்பெற்றதாகவும் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவான 100 துப்பாக்கிகள் கிடைக்கப்பெற்றதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயன்த ஜயவீர தெரிவித்தார்.

அத்துடன் பொது மன்னிப்புக் காலத்தில் தம்மிடவுள்ள சட்ட விரோத ஆயுதங்களை ஒப்படைப்பவர்களுக்கு எதிராக எந்தவொரு சட்ட நடவடிக்கையும் முன்னெடுக்கப்படாது எனவும் சட்டவிரோத ஆயுத பயன்பாட்டினால் ஏற்பட்டு வரும் பாதக விளைவுகளை தடுக்கும் நோக்கிலேயே அரசாங்கம் இவ்வாறு ஒரு நடவடிக்கையை முன்னெடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

By

Related Post