Breaking
Sun. Sep 22nd, 2024

கடந்த 24 மணி நேரத்திற்குள், அனைத்து ஆற்றுப் பகுதிகளிலும் உள்ள ஆறுகளில் நீர் வழமைபோன்று மாற்றமடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் கூறியுள்ளது.

மலைநாட்டுப் பகுதிகளில் ஆற்று நீர் மட்டம் பெரும்பாலும் குறைந்துள்ளதாக அந்த திணைக்களத்தின் நீர்ப்பாசன இயக்குனர் பிரேமா ஹெட்டியாராச்சி கூறினார்.

எவ்வாறாயினும் ஆறுகளை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளநிலை தொடர்ந்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டின் அனைத்து நீர் நிலைகளிலும் நீர் மட்டம் சாதாரண நிலைக்கு திரும்பியுள்ளதாகவும், வான்கதவுகள் திறக்கப்படுவதை தவிர்த்து இருப்பதாகவும் பிரேமா ஹெட்டியாராச்சி கூறினார்.

By

Related Post