Breaking
Sun. Sep 22nd, 2024

நாட்டில் சுகா­தார சேவையை முழு­மை­யாக வழங்­கு­வ­தற்கு; இன்னும் மூவா­யிரம் வைத்­தி­யர்கள் தேவைப்­ப­டு­கின்­றார்கள். ஆயினும் ஒரு வரு­டத்தில் ஆயிரம் வைத்­தி­யர்­கள்தான் பல்­கலைக் கழ­கங்­க­ளி­லி­ருந்து வெளி­யேறுகின்றனர். அவர்களுள் 250இற்கும் மேற்­பட்ட வைத்­தி­யர்கள் வெளி­நா­டு­க­ளுக்கு செல்­­கின்­றார்கள். இப்­பி­ரச்­சினை இன்னும் ஐந்து வரு­டங்­களின் பின்­னர்தான் தீர்க்­கப்­படும் என சுகாதார பிரதியமைச்சர் பைஸல் காசிம் தெரிவித்தார்.

மத்­தி­ய­முகாம் வைத்­தி­ய­சா­லைக்கு அண்மையில் திடீர் விஜ­ய­மொன்­றினை மேற்­கொண்ட சுகா­தார பிரதி அமைச்சர் அங்கு நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்:  நாட்­டி­லுள்ள வைத்­தி­ய­சா­லை­களை வேறு­ப­டுத்திப் பார்க்­காது எல்லா வைத்­தி­ய­சா­லை­க­ளையும் அபி­வி­ருத்தி செய்வதற்கு நட­வ­டிக்­கை­ எடுக்­கு­மாறு சுகா­தார அமைச்சர் கேட்­டுள்ளார்.

அதற்­கேற்­ற­வாறு நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கின்றோம். ஆதலால், மத்­திய முகாம் வைத்­தி­ய­சா­லையும் அபி­வி­ருத்தி செய்­யப்­படும்.

அபி­வி­ருத்­தி­களை மேற்­கொள்ளும் போது திட்­ட­மிட்டு நீண்ட காலத்­திற்கு நீடித்து நிலைக்கக் கூடி­ய­வ­கையில் செய்­யப்­பட வேண்டும். ஆதலால், இந்த வைத்­தி­ய­சா­லையில் காணப்­படும் கட்­டிடக் குறை­களை நிவர்த்தி செய்­வ­தற்­காக கட்­டிடத் திணைக்­க­ளத்தின் தொழில் நுட்ப உத­வியைப் பெற்று இந்த வைத்­தி­ய­சா­லையை அபி­வி­ருத்தி செய்வோம். மேலும், முதற்­கட்­ட­மாக இரண்டு மாடிக் கட்­டிடம் ஒன்­றி­னையும், மகப்­பேற்று விடுதி ஒன்­றி­னையும், மின்­பி­றப்­பாக்கி ஒன்றி­னையும் வழங்குவதற்கு­ரிய நட­வ­டிக்­கை­களை விரைவில் மேற்­கொள்­ள­வுள்வேன்.

இந்த வைத்­தி­ய­சா­லையில் நிலவும் ஆளணிப் பற்­றாக்­கு­றையை கிழக்கு மாகாண சபையின் சுகா­தார அமைச்­சர்தான் தீர்த்து வைக்க வேண்டும். நாட்டில் சுகா­தார சேவையை முழு­மை­யாக வழங்­கு­வ­தற்கு இன்னும் மூவா­யிரம் வைத்­தி­யர்கள் தேவைப்­ப­டு­கின்­றார்கள்.

ஆயினும் ஒரு வரு­டத்தில் ஆயிரம் வைத்­தி­யர்­கள்தான் பல்­கலைக் கழ­கங்­க­ளி­லி­ருந்து வெளி­யேறுகின்றனர். இதிலும் 250இற்கும் மேற்பட்ட வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்லுகின்றார்கள். பொதுவாக கிழக்கு மாகாணத்தில்தான் அதிகமான வைத்தியர்கள் பற்றாக்குறையாக காணப்படுகின்றார்கள். இப்பிரச்சினை இன்னும் ஐந்து வருடங்களின் பின்னர்தான் தீர்க்கப்படும் என்றார்.

By

Related Post