Breaking
Sat. Sep 21st, 2024

-மும்பை –

ஷாக்கீர் நாயக்கின் உதவியாளர் அர்ஷித் குரேஷியை மும்பையில் போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரளாவில் உள்ள இளைஞர்களை மூளைச்சலைவை செய்து அவர்களை ஐ.எஸ் அமைப்பில் சேர ஊக்குவிக்கும் பணியில் ஈடுபட்டதாக ஆர்ஷித் குரேஷி மீது சந்தேகம் தெரிவித்து  பயங்கரவாத தடுப்பு படை மற்றும் கேரள போலீசார் இணைந்து இரவு மும்பையில்  சோதனை நடத்தி  ஆர்ஷித் குரோஷி கைது செய்யப்பட்டார்.

சதித்திட்டம் தீட்டுதல், இரு குழுக்களுக்கு இடையே பகையை தூண்டுதல் ஆகிய பிரிவின் போலிசார் ஆர்ஷித் குரோஷி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஆர்ஷித், உடனடியாக மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டார். இவரை 4 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இவரிடம் மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். அதன் பிறகு கேரளாவிற்கு அழைத்துச் செல்லப்பட உள்ளார்.

இதற்கிடையே, கைது செய்யப்பட்ட ஆர்ஷித் குரோஷிக்கும் மதபோதகர் ஷாக்கீர் நாயக்கிற்கும் தொடர்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஷாக்கீர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை மக்கள் தொடர்பு அதிகாரியாக 2004 ஆம் ஆண்டு முதல் ஆர்ஷித் குரோஷி பணியாற்றி வந்ததாகவும் இதற்காக ரூ.44 ஆயிரம் சம்பளம் பெற்று வந்ததாகவும் போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவித்து வருகின்றன.

By

Related Post