Breaking
Wed. Oct 23rd, 2024

சில தினங்களுக்கு சவுதி அரேபியாவின் அமைச்சரவையில் அதிரடி மாற்றங்களை செய்தார் சவுதி மன்னர் சல்மான் 40 ஆண்டுகளாக சவுதி அரேபியவின் வெளியுறவு துறை .அமைச்சராக இருந்த சவுத் அல் பைஸல் உட்பட பலர்கள் அமைச்சரவையில் இருந்து விடுவிக்க பட்டு தகுதி உள்ள பலர்கள் புதிய அமைச்சர்களாக நியமிக்க பட்டனர்

அந்த புதிய அமைச்சர்கள் இன்று மன்னர் சல்மான் முன்னிலையில் உறுதி மொழி எடுக்கும் நிகழ்வு இன்று நடை பெற்றது

அந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய மன்னர் சல்மான் கூறிய வார்த்தைகள் சவுதி நாட்டவர்களை மட்டும் இன்றி முஸ்லிம் சமுதாயத்தையே கவரும் விதத்தில் அமைந்தது

மக்களுக்கு சேவை செய்யவே இறைவன் நமக்கு பொறுப்புகளையும் அதிகாரங்களையும் வழங்கியுள்ளான்
இந்த பொறுப்புகளையும் அதிகாரங்களையும் சுமந்திருப்பவர்கள் மக்களுக்கு சேவையாற்றும் விசயத்தில் அலட்சியமாக இருப்பதை என்னால் ஒரு போதும் பொறுத்த கொள்ள முடியாது

எனவே புதிய அமைச்சர்களாக வந்திருப்பவர்கள் மக்கள் சேவையில் முத்திரை பதிப்பவர்களாக தங்களை மாற்றி கொள்ளவேண்டும் அதுவே உங்களுக்கு இரு உலக வெற்றியையும் பெற்று தரும்
இவ்வாறு சல்மானின் உரை அமைந்திருந்தது

Related Post