Breaking
Wed. Oct 23rd, 2024

கொழும்பு மாநகர சபை நிர்வாக எல்லைக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளினதும் சிற்றுண்டிச்சாலைகளை உத்தியோகபூர்வமான பதிவு செய்யும் நடவடிக்கை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

மாநகர சபையின் பிரதான சுகாதார மருத்துவ அதிகாரி ருவன் விஜேமுனி இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
சில பாடசாலைகளில் உள்ள சிற்றுண்டிச் சாலைகள் முறையான சுகாதார தன்மைகளை கொண்டிருக்கவில்லை என முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதற்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related Post