Breaking
Sat. Sep 21st, 2024
epa04759506 Rohingya protesters carry a banner as they stage a demonstration outside the Myanmar Embassy to demand an end to discrimination against the Rohingya minority group in Kuala Lumpur, Malaysia, 21 May 2015. Community Action for Rohingya called for Myanmar's ambassador to Malaysia and embassy staff to leave the country over the migrant crisis. Meanwhile, Malaysia ordered its navy to conduct search-and-rescue operations to recover Rohingya migrant boats and bring them ashore. EPA/FAZRY ISMAIL

சேலை உடுத்த ஓநாய்

ஆழக் கடலிலே ஓலமிடும் ஒலி

‘ஐநா’ உனக்கின்று கேட்கிறதா…?
நாடி நரம்பெங்கும் விம்மி புடைக்குது
நாமும் வெடிகுண்டை தூக்கிடவா….?

காலை உடைக்கிறான் ஆளை முடிக்கிறான்
மூளை எடுத்தவன் உண்ணுகிறான்
வாலைப் பிடிக்கவா..? வாழ்வை முடிக்கவா..?
வாளைப் பிடித்து நாம் வாழ்ந்திடவா…?

பாலை வனம்போல மாறும் மனங்களால்
பாழும் கிணற்றிலே தள்ளப்பட்டோம்
சேலை உடுத்தந்த ஓநாய் ‘விராதி’னால்
மூலை முடுக்கெங்கும் கொல்லப்பட்டோம்…

ஏழை எமக்கின்று வாழவழிகொடு
ஏக இறைவனே கெஞ்சுகிறோம்
நாளை விடியுமா..? நாளை முடியுமா..?
நாடே துரத்தினால் என்ன செய்வோம்

கூறு கெட்ட எங்கள் அரபுக் குதிரைகள்
குள்ள நரிகளின் பொதிசுமக்க
யாரு கெட்டாலென்ன கவலை எமக்கில்லை
என்ற மனங்களோ குதூகலிக்க

சாந்த நெறிதந்த புத்தரின் போதனை
ரத்தத்தில் மூழ்கியே தத்தளிக்க
காந்தியம் பேசியே கயவர்கள் பர்மாவில்
காடைத்தனம் செய்து கொக்கரிக்க..

ஆழக் கடலிலே ஓலமிடும் ஒலி
‘ஐநா’ உனக்கின்று கேட்கிறதா…?
நாடி நரம்பெங்கும் விம்மி புடைக்குது
நாமும் வெடிகுண்டை தூக்கிடவா….?

– கவிஞர் அஸ்மின் –

Related Post